Wednesday, July 29, 2020

75 கற்பகாம்பிகை 5-5-2017

                                   பல்லவி

கருணாமயி கற்பகவல்லி கல்ப தருவே காமாக்ஷி

சரணாகதி அடைந்தேன் சடுதியில் வரமளிப்பாய்

                                                             கருணாமயி

                                 அனுபல்லவி

தருணமிதே தயை புரிவாய் தயாபரி தாயே

மரணம் மறுபிறவி இலாது  தயை செய்திடுவாய்

                                                           கருணாமயி

                                    சரணம்

தினந்தினம் தீனன் நான் தாபத்ரயத்தில் தவித்திட

வனத்தீயில் சிக்கி மருவிடும் மான்போல் மயங்கிட

இனமறியா இம்மை மறுமை சூழலில் சிக்கி அழுதிட

க்ஷணத்தில் மோக்ஷமளித்திடுவாய் மோகனாம்பாளே

                                                                 கருணாமயி 

0 Comments:

Post a Comment

<< Home