Wednesday, July 29, 2020

71 பிரம்மா வாக்கு 10-01-2017

                           பல்லவி

மூன்று குணம் கொண்டு அலைந்திடும் மனிதா

சான்றோர் வாக்கின் படி சடுதியில் திருந்திடு

                                                           மூன்று

                         அனுபல்லவி

தோன்றிடும் தேவர் குணமாம் போகம் தனை

மீண்டும் மீண்டும் மிதமாக்கிடு – தாம்யம்

                                                          மூன்று

                             சரணம்

மனித குணத்தின் படி மனம் பேராசைக் கொண்டு

தினமும் திரிந்திடும்- மற்றவர்க்கு அளித்திடு – தத்தம்

சினம் கொண்டு சிவந்திடும் அரக்கர் குணம் வந்தால்

கனிவுடன் இரக்கம் கொள்வாய் – தயஸ்வம்

                                                               மூன்று


0 Comments:

Post a Comment

<< Home