Wednesday, July 29, 2020

69 ஆத்மன் (கீதை, அத். 2) 7-12-2016

                         பல்லவி

ஆயுதம் அறுக்காது தீஅதுவும் தீண்டாததனை

வாயுதான் உலர்த்தாது நீரும் நனைக்காததனை

                                                           ஆயுதம்

                       அனுபல்லவி

காயந்தான் மரித்தாலும் சாகாது ஆத்மா

சாயாது நிலைத்திருக்கும் சாஸ்வதமாய்

                                                          ஆயுதம்

                                          சரணம்

ஆடைகள் கிழிந்திட்டால் கணத்தில் களைந்திட்டு

சூடுவோம் வண்ணப் புத்தாடைகளை வனப்புடன்

கேடு கெட்டு சரீரம் அழிந்து ஒழிந்து விட்டாலும்

தேடியே அடைந்திடும் புத்தம் புது சரீரங்களை

                                                          ஆயுதம


0 Comments:

Post a Comment

<< Home