Wednesday, July 29, 2020

66 வேங்கடமுடையான் 23-09-2016

                                   பல்லவி

வேங்கடமுடையானை வேண்டிட்டால் வேதனை தீருமே

தாங்கவொண்ணாத் துயரம் போம் தளராதே தவிக்காதே

                                                                                வேங்கட

                               அனுபல்லவி

தீங்கெலாம் நீங்கிடும் தீவினை போம் திகைக்காதே

ஓங்கும் புகழுடையானை ஓங்கார  ஸ்வரூபனை ஓம்பிடு

                                                                           வேங்கட

                                    சரணம்

அன்புடன் அவனை வணங்கிட்டால் ஆனந்தம் பொங்கிடும்

நண்பனைப் போல் நாளும் துணை நின்றிடுவான்

இன்பம் கூடும் இருவிழிகள் ஒளிர்ந்திடும் இயல்பாகவே

நன்மைகள் நாடி வரும் நாளும் நல்லதே நடந்திடும்

                                                                           வேங்கட


0 Comments:

Post a Comment

<< Home