Wednesday, July 29, 2020

68 மனித நலம் 6-12-2016

                                 பல்லவி

காமந்தகாரனாய்க் கானல் நீரைத் தேடி அலைந்து

ஏமாற்றமடைந்து ஏக்கமடைதல் நலமோ மனிதா

                                                        காமந்தகாரனாய்

                             அனுபல்லவி

சமானமெனக்கில்லை என்று செருக்கடையாதே

குமரனும் குடுகுடு கிழவனாகிடுவான் சடுதியில்

                                                         காமந்தகாரனாய்

                                     சரணம்

தினமும் திவ்ய நாமங்களை ஜபித்திடு ஜடமே

மனந்தனை மனதால் கட்டிடு மயங்கிடாதே

சினந்தனை ஒழித்திடு சீராக வாழ்ந்திடுவாயே

கனத்திடும் பிறவி பாரம்  ஒழிந்திடுங் கலங்காதே

                                                        காமந்தகாரனாய்


0 Comments:

Post a Comment

<< Home