Wednesday, July 29, 2020

67 கணபதி 4 30-09-2016

                               பல்லவி

ஐங்கரனை ஐயன் மகனை ஜபித்திடு என்றும் நற்

கைங்கர்யங்கள் செய்திடு மகாகவியைத் துதித்திடு

                                                               ஐங்கரனை

                             அனுபல்லவி

சங்கரன் மைந்தனைத் தொழுதிட்டால் துகள்மதியே யம

கிங்கரர்கள் சிரம் தாழ்த்தி சாமரம் வீசி வணங்கிடுவர்

                                                              ஐங்கரனை

                                   சரணம்

சஞ்சலங்கள் யாவும் சடுதியில் மறைந்திடும் அவனருளால்

சஞ்சித பாவங்களும் நீங்கிடும் சரணம் அடைவாய் அவனை

குஞ்சித பாதனும் உமையாளும் உனக்கருள்வாரென்றே    

நெஞ்சார நினைத்து வாயாரப் பாடி வாழ்த்தி வணங்கிடு

                                                                 ஐங்கரனை 


0 Comments:

Post a Comment

<< Home