Wednesday, July 29, 2020

73 கஜேந்திர மோக்ஷம் 15-2-2017

                                  பல்லவி

தாகம் தணிந்திடத் தாமரைக் குளம் புகுந்த கரிநாதன்

வேகமாய் வந்த முதலை வாயில் சிக்கித் தவித்திட

                                                                       தாகம்

                              அனுபல்லவி

சோகமுடன் நின் நாமந்தனை நினைந்தேத்திட

மோகவலை தகர்த்திடும் மோகனனே காத்திட்டாய்

                                                                     தாகம்

                                     சரணம்

பாண்டிய ராஜன் முனி சாபத்தால் கரியாகித் தவிக்கையில்

வேண்டிய வரம் தந்திட வேகமுடன் வந்திட்டாய்

தீண்டிய சாபம் நீங்கிட முதலைக்கும் மோக்ஷம் அளித்தாய் 

தாண்டிடப் பிறவிக் கடலினை ஆண்டவனே அருள்வாய்

                                                                               தாகம்

0 Comments:

Post a Comment

<< Home