Wednesday, July 29, 2020

74 முருகன் 4 4-5-2017

                                  பல்லவி

செந்தூர் முருகனை சேவித்திட்டால் நினைந்திட்டால்

சிந்தா வியாகூலம் சடுதியில் விரைந்தே விலகிடுமே

                                                                    செந்தூர்

                                அனுபல்லவி

சிந்தூரம் சந்தனம் கலந்த மார்புடையோனை

மந்திரமாய் ஆறு எழுத்துக் கொண்டானை

                                                                   செந்தூர்

                                         சரணம்

பிறப்பிறப்பெனும் சகதியில் உழன்றிடும் உனக்கு

சிறப்புடன் சிவபதம் காட்டிடுவான் சிவபாலன்

மறுப்பேதுமின்றி வேண்டியதை வரமாயளிப்பான்

கறுப்புக் காற்றுப் பேய் பிசாசனைத்தையும் அழிப்பான்

                                                                     செந்தூர்


0 Comments:

Post a Comment

<< Home