97 ஆதிசிவன் 10-2-2021 2.11 pm
பல்லவி
ஆதி சிவனே அம்மையப்பா அருள் தாரும் ஆண்டவனே
பாதி உடல் அம்மைக்குத் தந்தனையே பரம் பொருளே
ஆதிசிவனே
அனுபல்லவி
நீதி சாஸ்த்திரம் கௌதமற்கு உபதேசம் செய்தனையே
சோதிக்கலாகாது போதுமிந்த வேதனை முக்தி தாரும்
ஆதிசிவனே
சரணம்
வந்தியின் துயர் தீர்க்க பிட்டுக்கு மண் சுமந்தனையே
நந்தி முதலாம் கணங்களுக்கெல்லாம் தலைவனே
சிந்திக்கும் போதெல்லாம் நின்னுருவே நிலை நிற்கும்
செந்தமிழ் தலைச் சங்கத்தின் முதல்வா முக்கண்ணா
ஆதிசிவனே
0 Comments:
Post a Comment
<< Home