93 ஐயப்பன் 5-2-2021 12.25 pm
பல்லவி
ஹரிஹரசுதனே ஐயப்பா வீர மணிகண்டனே
அரிஷட்வர்கமெனும் அறுவகைப் பிணி தீர்ப்பாய் ஹரிஹரசுதனே
அனுபல்லவி
திருவருள் புரிய வேண்டும் தீரனே வில்லாளியே
சரணமடைந்தேன் சஞ்சித பாபங்கள் அகற்றிடு ஹரிஹரசுதனே
சரணம்
இருமுடி கட்டி உனைத் தேடி ஓடி வரும் பக்தருக்கு
இருவினைப் பாவ புண்ணியங்கள் தீர்த்திடுவாய்
எருமேலி தாண்டி பம்பை ஸ்னானம் செய்து பின்
அருள்வேண்டி பதினெட்டுப் படிகளும் ஏறிட்டால் ஹரிஹரசுதனே
0 Comments:
Post a Comment
<< Home